தமிழகத்தில் விமான போக்குவரத்து சேவைகள் விரிவாக்குவது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது இன்னும் ஐந்து விமான போக்குவரத்து சேவைகள் தொடங்கப்படவுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
விமானத்துறை தகவல்
இந்திய நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் விமான போக்குவரத்துக்காக சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய முக்கியமான இடங்களில் மட்டும் விமான நிலையங்கள் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் விமான போக்குவரத்தை விரிவாக்குவது குறித்து பாராளுமன்றத்தில் நடந்து வரும் கூட்டத்தில் திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதிலளித்துள்ளார்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் – கங்கனா ரனாவத் காரசார ட்வீட்!!
இது குறித்து அவர் கூறும் போது, ‘மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 195 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி விமான போக்குவரத்தை விரிவாக்குவதற்கும் பழைய விமான நிலையங்களை புதுப்பிப்பதற்கும் பயன்படும். ஏற்கனவே இருக்கும் ஏழு விமான நிலையங்களுடன் கூடுதலாக தொடர்ந்து தஞ்சாவூர், நெய்வேலி, வேலூர், ராமநாதபுரம், சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் விமான போக்குவரத்து சேவைகள் புதிதாக துவங்கப்பட உள்ளன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது தொடர்பாக சேலம் மாவட்டத்திற்கு 35 கோடி, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 50 கோடி, வேலூர் மாவட்டத்திற்கு 44 கோடி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 36 கோடி, நெய்வேலி மாவட்டத்திற்கு 30 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட சில இடங்களில் விமானநிலையங்கள் ஏற்கனவே இயக்கத்தில் உள்ளன. ஆனால் அதற்கான சரியான சேவைகள் இல்லை. தொடர்ந்து இத்தகைய சிறிய விமான நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது’ என கூறினார்.