தமிழ் திரையுலகில் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருபவர் சமந்தா. தொடர்ந்த புகைப்படங்களை தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற குட்டி பனியனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சமந்தா
மாடலிங் துறையில் கால் பதித்த சமந்தா முதலில் பல விளம்பர படங்களில் நடித்தவர். அதன் பிறகு மாஸ்கோவில் காவேரி என்ற படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அந்த படம் அவருக்கு அந்த அளவிற்கு கைக்கொடுக்கவில்லை. அதன் பிறகு சிறிது பிரேக்கிற்கு பிறகு பானா காத்தாடி என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதில் இவரின் நடிப்பும் அழகும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் அவர் தெலுங்கு திரைப்படமான நானி படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படமே இவருக்கு சினிமா திரையுலகில் நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தது.
அதன் பிறகு அவர் தெலுங்கில் நடித்த பிருந்தாவனம் திரைப்படம் தெலுங்கிலும் அவருக்கு அங்கீகாரத்தை பெற்று தந்தது. அதன் பிறகு வளர்ந்து வரும் நாயகியில் இருந்து முன்னணி நாயகியாக வலம் வந்தார். ஒருவர் என்ன தான் முன்னணி நடிகையாக இருந்தாலும் கல்யாணம் ஆகி விட்டால் அவர்களின் மார்க்கெட் குறைந்து தான் போகும்.
ஆனால் சமந்தா விஷயத்தில் அப்படி இல்லை. இது வரையிலும் தனது மார்க்கெட்டை தக்க வைத்துள்ளார் சமந்தா. தற்போது புகைப்படத்தை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் சமந்தா வெள்ளை நிற குட்டி பனியனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.