தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. லாக்டவுன் சமயத்தில் இருந்து தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் சமந்தா நீச்சல் குளத்தில் நடந்தவாறு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சமந்தா
தமிழில் வெளியான மாஸ்க்கோவில் காவேரி படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. அதிலிருந்து தற்போது வரை திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்து வருகிறார். இதுவரையிலும் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார் சமந்தா.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
என்ன தான் நாயகிகள் ஆரம்ப காலத்தில் டாப் ரேஞ்சில் இருந்தாலும் அது அந்த அழகும் இளமையும் இருக்கும் வரைக்கு தான். ஆனால் சமந்தாவிற்கு 30 வயதை தாண்டியும் தற்போது வரை அதே இடத்தில் தனது மார்க்கெட்டை தக்கவைத்து வருகிறார். மேலும் இவருக்கு 2017 இல் நாகா சைதன்யா என்பவருடன் திருமணமும் ஆனது.
திருமணம் ஆகியும் அவருக்கு ரசிகர்கள் குறையவில்லை. தற்போது வரை தனது அழகையும், கட்டுடலையும் மெயின்டைன் செய்து வருகிறார் சமந்தா. மக்கள் பலரும் உங்கள் அழகின் ரகசியம் என்ன என்றும் கேட்டிருந்தனர். அதற்கு சமந்தா பதிலும் அளித்திருந்தார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதாவது பால் சம்மந்தப்பட்ட எந்த பொருட்களையும் சேர்த்துக் கொள்ள மாட்டாராம். மேலும் உடற்பயிற்சி, தியானம் என தொடர்ந்து செய்து வருவதால் உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கும் சமந்தாவிற்கு அது தான் ஸ்பெஷல் அழகு என்றும் அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.
சமந்தா தன்னுடைய இந்த வளர்ச்சிக்கு தன் கணவரும் ஒரு காரணம் என்றும் பல பேட்டிகளில் கூறியுள்ளார். மேலும் தான் மிகவும் திமிராக இருந்ததாகவும் தன் கணவர் தான் இந்த அளவிற்கு தன்னை மாற்றியதாகவும் கூறியுள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் குளத்தில் நடத்தவாறு வெள்ளைநிற சுடிதாரில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.