தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இன்று தனது 3 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வரும் சமந்தாவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமந்தா
தமிழில் ‘மாஸ்கோவில் காவேரி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சமந்தா. மாடலிங் துறையில் இருந்த சமந்தா பல விளமபர படங்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பார் சமந்தா. அதன் பிறகு அவருக்கு அதர்வா உடன் ‘பானா காத்தாடி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பிறகு அவர் நானி படத்தில் நடித்ததன் மூலம் அதிக புகழை பெற்றார். இந்த படம் இவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இவர் நடிகர் சித்தார்த் அவர்களை காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இவர்கள் அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படமும் வெளியானது. சிம்பு, திரிஷா நடித்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
மேலும் விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கிலும் சமந்தா நடித்திருப்பார். அதன் பிறகு முன்னணி நடிகையாக வலம் வந்தார். சில படங்களுக்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போனார் சமந்தா.
தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நாகா சைத்தன்யாவை 2017 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமந்தாவிற்கு திருமணம் ஆன நாளில் ‘மிஸ் யூ சம்மு’ என்றும் பலர் புலம்பிக் கொண்டிருந்தனர். இன்று அவர்களுக்கு திருமண நாளை ஒட்டி சமந்தா அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.