பிரபல இயக்குனரான பிரபுதேவாவை தற்போது ஹிந்தி பிரபல நடிகர் ஒருவர் ஆத்திரமடைந்து திட்டி தீர்த்துள்ளாராம். தற்போது இந்த செய்தி இணையத்தையே கலக்கி வருகிறது.
பிரபுதேவா:
சினிமாவில் நடன ஆசிரியர், இயக்குனர் நடிகர் என பல அவதாரம் எடுத்தவர் தான் பிரபுதேவா. தொடக்க காலத்தில் தமிழில் பல ஹிட்களை கொடுத்த பிரபுதேவா பின்பு படம் இயக்கும் ஆர்வத்தில் ஹிந்தி பக்கம் சென்றார். அங்கு சென்று அவர் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை ரீமேக் செய்து வந்தார். பின்பு அவர் அங்கேயே செட்டில் ஆகிட்டார் என்றே சொல்லலாம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் அவர் ஹிந்தியில் இருந்து வரவில்லை. அந்த வகையில் கடைசியாக சல்மான் கானை வைத்து ராதே என்னும் திரைப்படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் பெரிய பிளாப் ஆனது. மேலும் ரசிகர்கள் பலர் இந்த படத்திற்கு நெகட்டிவ் கமெண்டை தெரிவித்து வந்தனர்.
‘சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம்’ – அன்றே கணித்தார் வடிவேலு!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதுமட்டுமல்லாமல் சல்மான் கான் வரலாற்றிலே மிக பெரிய பிளாப் என்றால் அது ராதே திரைப்படம் தானாம். இதனால் கடுப்பான சல்மான் கான் பிரபுதேவாவை அழைத்து உங்கள நம்பி இந்த படத்தை செஞ்சதுக்கு இது தான் நிலைமை என்று ஆத்திரத்தில் பேசியுள்ளாராம். தற்போது இதன் காரணமாக இனி அனைத்து ஹிந்தி நடிகர்களும் பிரபுதேவா படத்தில் நடிக்க அச்சமடைவார்கள் என்றே சொல்லலாம்.