உலக நாடுகள் அனைத்திலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது தாய்லாந்து அரசு அதிர்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தாய்லாந்து:
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகள் அனைத்திலும் மக்களை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ் தொற்று. இதனால் பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். மேலும் பலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு கடுமையான வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். இதுவரை எந்த உலக நாடும் கொரோனாவில் இருந்து மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook
=> Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் தற்போது அனைத்து உலக நாட்டிலும் கொரோனா வைரஸ் உருமாறி பரவி மக்களை பாதித்து வருகிறது. இதன் காரணமாக மக்களை பாதுக்காக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாய்லாந்து அரசு ஒர் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
‘சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம்’ – அன்றே கணித்தார் வடிவேலு!!
அதன்படி இந்தியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாட்டின் வகை தொற்று தற்போது தாய்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாங்காங்கில் கட்டுமான தொழில்களை செய்து வந்த 15 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தற்போது ஓர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.