ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பணி நீக்க அறிவிப்பை சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் திடீரென வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளது.
பணி நீக்கம்:
உலகில் நிலவி வரும் பொருளாதார பின்னடைவு காரணமாக IT நிறுவனங்கள், சில்லறை வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் பல நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது.
10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்தியா…, இறுதி போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து!!
அதாவது சம்பள குறைப்பு, ஊழியர்களை பணி நீக்கம் போன்றவைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தற்போது சேல்ஸ்போர்ஸ் நிறுவனமும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமீட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இது குறித்து வெளியான தகவலின் படி, சுமார் 2500 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது, முதலீட்டாளர்கள் நிறுவனத்திடம் அதிக லாபம் கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தில் மொத்தம் 73,541 பேர் வேலை பார்த்ததாகவும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனம் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை யை 36% அதிகரித்து உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் வாடிக்கையாளர்களுக்கு அதிக சேவை செய்வதற்காக, இந்த பணியமர்த்தல் மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் 90 ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாகவும், வரும் ஜனவரி 2023 வரையில் பணியமர்த்தலை நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.