சைன்ஸ்பரி நிறுவனம் 18,000 புதிய தொழிலாளர்களை பணியமர்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பணி:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதிய பணியாளர்களை நியமிக்க முடிவு செய்து உள்ளதாக பிரிட்டிஷ் பல்பொருள் அங்காடி குழுவான “சைன்ஸ்பரி நிறுவனம்” நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. மேலும் Sainsbury நிறுவனம் UK-ன் 2வது பெரிய பல்பொருள் அங்காடி என்று சொல்லப்படுகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாட உள்ளதால், பொதுமக்கள் அதிகமான மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு Sainsbury நிறுவனத்தை நாடுவார்கள். இதையடுத்து பொதுமக்கள் எந்த ஒரு சிரமத்தையும் எதிர் கொள்ள கூடாது என்பதற்காக, Sainsbury நிறுவனம் 18,000 தொழிலாளர்களை பணி அமர்த்த உள்ளன.
தமிழக மக்களே உஷார்., 11 மாவட்டங்களில் கொட்ட போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
மேலும் இந்த அறிவிப்பின் படி, சூப்பர் மார்க்கெட் வணிகத்திற்கு 15,000 பேரும், argos பொது வணிகத்திற்கு 2,000 பேரும், logistics பணிக்கு 1000 பேரும் ஒதுக்கப்பட்டு உள்ளனர். மேலும் பணியாளர்களுக்கு தள்ளுபடி அட்டை, இலவச உணவு , அதிக சம்பளம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். மேலும் சில்லறை விற்பனையாளர்களை ஈர்க்கும் வண்ணம் அவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.