இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத தினம் இன்று. “கிரிக்கெட் ஜாம்பவான்” சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற நாள் இன்று தான். கிரிக்கெட் துறையில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும் அவரது புகழ் இன்றும் ஓய்ந்தபாடில்லை.
“கிரிக்கெட் ஜாம்பவான்”
இந்தியாவில் மக்கள் அனைவரும் சில விஷயங்களில் ஒரு மாதிரியான சிந்தனைகள் இருக்கும். குறிப்பாக விளையாட்டுகளை பொறுத்தவரை இந்திய மக்களுக்கு தனி பிரியம். அதிலும் ஒருவர் இந்திய மக்களிடம் அதிகமாக பேசப்பட வேண்டும் என்றால் அவர் கிரிக்கெட் துறைக்குள் நுழைந்து சாதிக்க வேண்டும். அப்படி இந்திய கிரிக்கெட் அணிக்காக பல வெற்றிகளை தேடி தந்தவர், “கிரிக்கெட் ஜாம்பவான்” சச்சின் டெண்டுல்கர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்த பெயரினை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இந்த பெயருக்கும் அவரது ஜெர்சி 10 என்ற எண்ணிற்கும் தனி மதிப்பு மற்றும் மாயம் உள்ளது. “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்பர்.
அதற்கு எடுத்துக்காட்டாக சச்சின் தனது சிறிய வயதிலேயே கிரிக்கெட் விளையாட பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடினார்.
ஓய்வு அறிவிப்பு:
அவர் பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் கண்டிப்பாக சதம் அடித்து விடுவது அவரது வழக்கம். கடந்த 2013 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியுடன் தனது கிரிக்கெட் பயணத்தை முடித்து கொண்டார். அவரது கடைசி போட்டி இது தான் என்பதால் அவரது தாயார் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் இந்த போட்டிகளை காண வந்திருந்தனர். இந்த போட்டியில் டாஸ் போடுவதற்காக விசேஷமான நாணயம் பயன்படுத்தப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஒரு பக்கத்தில் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் சின்னம் மற்றும் சச்சினின் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு நாள் போட்டிகள் 3 நாட்களில் முடிவடைந்து விட்டது. இந்த போட்டிகளில் அவர் 74 ரன்கள் எடுத்தார். இந்த போட்டிகளில் இருந்து அனைத்து விதமான போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார்.
அவர் இன்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும் அவரது புகழ் ரசிகர்கள் மத்தியில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இவரது மகத சாதனைக்காக இந்தியா அரசு அவருக்கு உயரிய விருதான “பாரத ரத்னா” அளித்து கவரவித்தது.