தண்டனை காலம் முடிவடைவதற்கு முன் சசிகலா விடுதலை செய்யப்படுவர் என்ற செய்தியை அவர் இருக்கும் சிறைத்துறை அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.
சசிகலா சிறையில் அடைப்பு:
கடந்த சில வருடங்களுக்கு முன் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் ஊழல் வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கபட்டனர். இவர்கள் மூவரும் பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்க பட்டனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.
முன்கூட்டியே விடுதலையா??
இந்த நிலையில், சசிகலா தண்டனை காலம் முடிவடைவதற்கு முன் விடுதலை செய்யப்படுவார் என்று சிலர் வதந்திகளை கிளப்பி விட்டனர். எப்போதும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைவாசிகள் நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலம் முடிவடைவதற்கு முன் விடுதலை செய்யப்படுவர். அந்த அடிப்படியில் தான் சசிகலாவும் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.
சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு:
ஆனால், இந்த பிரச்னை குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது” சிறைவாசிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது உண்மையே. ஆனால், சுதந்திர தினத்திற்கு 10 நாட்கள் முன்பு தன இதனை பற்றிய ஆலோசனை நடக்கும். நாங்கள் ஒரு அறிக்கை தயாரிப்போம்.
ஃபிஃபா மகளிர் உலக கோப்பை 2023 – ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்துகின்றன..!
அதனை கர்நாடக மந்திரிசபையில் ஒப்படைத்து அதனை கவர்னருக்கு அனுப்புவோம். அவர் சரி பார்த்து முடிவு செய்த பிறகு சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவர். அந்த வகையில் சசிகலா குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்க பட வில்லை” என்று கூறியுள்ளனர்.