சட்டமன்ற தேர்தல் விதிமுறை – சென்னையில் 800 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு!!

0

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து இதுவரை சென்னையில் 800 துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் இதற்கான தேர்தல் தேதியை சமீபத்தில் தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர். அதன்படி தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் தெரிவித்தனர். இதனை முன்னிட்டு அந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் பொது இடங்களில் தலைவர்கள் புகைப்படங்கள் மறைக்கப்படும். மேலும் வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்து செல்லவும் தடை விதிக்கப்படும். அந்த வகையில் உரிமம் பெற்று வைத்திருக்கப்படும் துப்பாக்கிகள் அனைத்தும் காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் – அறிக்கையை வெளியிட்ட கமல்ஹாசன்!!

இந்நிலையில் தற்போது சென்னையில் இதுவரை 800 துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள உரிமம் பெற்ற 1900 துப்பாக்கிகளை வாக்குப்பதிவு தேதிக்கு முன்பாக காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here