‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு முன்பு ரோஷினி செய்துவந்த வேலை – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

‘பாரதி கண்ணம்மா’ தொடரில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். சினிமாவுக்குள் நுழையும் முன்னதாக இவர் பார்த்து வந்த வேலைகள் பற்றி இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். பாரதி கண்ணம்மா தொடரில் அதிரடி பெண்ணாக நடித்து வரும் ரோஷினி நிஜத்தில் மிகவும் அமைதியானவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். மாடலிங் மீது ஆர்வம் கொண்ட ரோஷினி அந்த துறையில் சாதிக்க விரும்பினார். எதிர்பார்த்தது போல இல்லாமல், இவருக்கு ஏகப்பட்ட அவமானங்களும் கண்ணீர்களும் தான் பரிசாக கிடைத்தது.

‘எகிறி குதித்தேன்’ பாடலுக்கு அஸ்வினுடன் நடனமாடும் ஷிவாங்கி – வேற லெவலில் வைரலாகும் ப்ரோமோ!!

தொய்ந்து விடாமல் தொடர்ந்து மாடலிங் துறையில் முயற்சி செய்துகொண்டிருந்த இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட நடிகை ரோஷினி இன்று அனைவராலும் பாராட்டப்படக்கூடிய ஒரு நிலைமைக்கு வந்துள்ளார்.

தனது கருப்பு நிறத்தால் மாடலிங் துறையில் அவரால் நிலைத்திருக்க முடியாமல் போனது. ஆனால் அதே நிறம் தான் அவரை இன்று இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘பாரதி கண்ணம்மா’ தொடரில் கண்ணம்மா கேரக்டர் பலரது வாழ்க்கைக்கு உந்துதல் அளிக்கக்கூடியதாயிருக்கிறது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மாடலிங் துறைக்குள் நுழைவதற்கு முன்னாக ரோஷினி ஒரு வங்கியில் நிர்வாகியாக பணியாற்றியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here