ரோஹித் சர்மா :
கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் உலக கோப்பை தொடரானது மிக சிறப்பாக அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியானது நாளை மறுநாள் (அக்டோபர் 29) நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா படைக்க போகும் சாதனை குறித்து இதில் காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது ரோஹித் சர்மா இப்போட்டியில் 47 ரன்கள் குவித்தால், சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களை கடந்த 5வது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். இச்சாதனையை ரோஹித் படைக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 18000 ரன்களை கடந்த 20வது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெறுவார். கடந்த ஆட்டத்தில் ரோஹித் 46 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை 2023: சுருண்டது நடப்பு சாம்பியன்…, 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அசத்தல் வெற்றி!!