அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற காலத்தில்,அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக அரசு வழங்கி வருகிறது. இதன்படி, கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து தேசிய அளவிலான (NPS) ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் அமல்படுத்தின. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் சிறந்த பலன் அளிக்க வில்லை என்ற கருத்தும் பரவலாக இருக்கிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில், மத்திய அரசானது இந்த ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அரசு பணியில் இருக்கும் போதே ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, அவர்கள் ஓய்வு பெற்ற பின் அதனுடன் கூடுதல் தொகையை சேர்த்து ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியமானது 40 முதல் 45 சதவீதம் வரை கிடைக்கும் அளவுக்கு ஒரு புதிய மாற்றத்தை செய்ய உள்ளது. ஆனால், இந்த மாற்றம் குறித்து விரைவில் அரசு வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.
அரசு ஊழியர்களே.., இரண்டாவது திருமணம் செய்ய தடை.., அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட அசாம் மாநில அரசு!!