ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் TET (ஆசிரியர் தகுதி தேர்வு) நடத்தப்பட்டு வருகிறது. இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே ஆசிரியர் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலப் போக்கில் பணி நியமத்திற்காகவும் ஒரு போட்டி தேர்வை TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இதனால் அதிர்ச்சி அடைந்த TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்வர்கள் பலர், இந்த பணி நியமன போட்டித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலவித தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதற்கிடையில், திமுக கட்சியானது தேர்தல் வாக்குறுதியின் போது ‘தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்கப்படும்’ என தெரிவித்தது. ஆனால் இன்றளவும், பணி நியமன தேர்வை ரத்து செய்வது குறித்து எந்தவொரு உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை. இதையடுத்து, தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை “விரைவில் ‘டெட்’ தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க ஆவன செய்ய வேண்டும்” என எச்சரித்துள்ளார்.
TET தேர்வில் எளிமையாக தேர்ச்சி பெற சிறந்த ஆசிரியர்களை கொண்ட பயிற்சியுடன் Course Pack-கிற்கு இந்த தொலைபேசி எண்ணை அணுகவும்.