ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் நாளை தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் எந்த அணி ஐபிஎல் பட்டத்தை தட்டிச் செல்ல போகிறது என்று தெரியவில்லை. மேலும் இந்த ஆண்டுக்கான முதல் சீசனில் GT மற்றும் CSK அணிகள் மோத உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் ரோஹித் சர்மா RCB அணி வீரர் ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது. அதாவது ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்த 15 சீசனில் மொத்தம் 251 சிக்ஸர்கள் விளாசியுள்ளார் வில்லியர்ஸ். இவரை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோகித் சர்மா 240 சிக்சர்கள் விளாசி இவருக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.
“ஐபிஎல் சீசனில் நானும் விளையாட வரேன்” ரிஷப் பந்த் பேச்சால் பரபரப்பு., சவுரவ் கங்குலி ஆறுதல்!!!
இதனால் நாளை தொடங்கவிருக்கும் ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா 11 சிக்ஸர்கள் விளாசினாலே வில்லியர்ஸின் சாதனையை எளிதாக முறியடித்து விடலாம். எனவே இந்த ஆண்டு IPL தொடரில் ரோஹித் இந்த சாதனையை முறியடிப்பாரா என பார்க்கலாம்.