கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நாளை (மார்ச் 31) முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணி மோத உள்ளதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இப்படி ஒருபுறம் இருக்க விபத்தில் படுகாயமடைந்த அதிரடி வீரர் ரிஷப் பந்த் “எல்லாரும் விளையாடும்போது நான் ஏன்? வரக்கூடாது” என பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது “என்னால் கிரிக்கெட் மற்றும் உணவு இல்லாமல் இருக்க முடியாது. தற்போது உடல்நிலை மோசமாக இருப்பதால் ஆரோக்கியமான உணவுகளை டாக்டர் சாப்பிட சொன்னார். ஐபிஎல் சீசனும் தொடங்கிருச்சு நானும் விளையாட வரேன்.” என ஃபுட் டெலிவரி விளம்பரத்தில் பேசியிருப்பார். ஆனால் இதில் உண்மை தன்மை கலந்திருப்பதால் ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் கேள்வி கேட்க தொடங்கி விட்டனர்.
முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.., இது தாங்க இப்போதைக்கு.., உண்மையை சொன்ன பிரபலம்!!
இதுகுறித்து ரிஷப் பந்த்தின் டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி கூறுகையில், “பந்த் இல்லாமல் அணி வலுவிழந்ததாக உள்ளது. ஆனால் இன்னும் சில காலங்களுக்கு அவருக்கு ஓய்வு தேவை. உடல்நிலை குணமாகி திரும்பும் போது சிறந்த வீரராக திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை.” என தெரிவித்துள்ளார்