கோலிவுட் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் அண்மையில் தன் வீட்டில் 60 சவரன் நகை திருடு போனதாக புகார் அளித்திருந்தார். இதன் விளைவாக போலீசார் இவரது வீட்டு ஊழியர்களை விசாரணை செய்தனர்.இதில் அவரது வீட்டு பணிப்பெண் ஈஸ்வரி தான் குற்றவாளி என தெரியவந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் இவரை கடுங்காவலில் எடுத்த போலீசார் தீவிர விசாரணை செய்துள்ளார். இதன் விளைவாக இவரிடம் இருந்து 100 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதை தொடர்ந்து மீண்டும் கூடுதலாக 43 பவுன் நகை ஈஸ்வரிடம் இருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
“ஐபிஎல் சீசனில் நானும் விளையாட வரேன்” ரிஷப் பந்த் பேச்சால் பரபரப்பு., சவுரவ் கங்குலி ஆறுதல்!!!
ஆனால் ஐஸ்வர்யாவோ வெறும் 60 பவன் தான் திருடு போனதாக புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐஸ்வர்யா தன் வீட்டில் திருடு போன நகை மொத்தம் 200 பவன் என புதிதாக ஒரு புகாரினை போலீசாரிடம் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த திடீர் முடிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.