ஏப்ரல் 6 வரை கல்லூரி அடைப்பு…..,பாலியல் புகார் எதிரொலி….,

0
ஏப்ரல் 6 வரை கல்லூரி அடைப்பு.....,பாலியல் புகார் எதிரொலி....,
ஏப்ரல் 6 வரை கல்லூரி அடைப்பு.....,பாலியல் புகார் எதிரொலி....,

சென்னை கலாஷேத்ரா கல்லூரி ஆசிரியர் மீதான பாலியல் புகார் மற்றும் மாணவர்களின் போராட்டத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி வரை கல்லூரியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்லூரி மூடல்

சென்னையில் உள்ள கலாஷேத்ரா கவின் கலைக் கல்லூரி மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு கல்வி நிறுவனமாகும். இந்த கலைக்கல்லூரியில் நாட்டியம் மற்றும் இசை ஆகியவை பாடங்களாக கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கல்லூரியில் பேராசியராக பணியாற்றி வரும் நபர் மாணவிகளிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாக சில தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

200 சவரன் திருடு போனதாக புதிய புகார் கொடுத்த ஐஸ்வர்யா..,ஆத்தாடி இது என்ன லிஸ்டு பெருசாகிகிட்டே போகுது!!

மேலும், பாலியல் தொல்லை தொடர்பான புகாரை விசாரிக்காமல் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அக்கல்லூரியின் மாணவ, மாணவிகள் தற்போது உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில், இதுவரை பதில் அளிக்காத நிர்வாகம் கலாஷேத்ரா அறக்கட்டளை ருக்மணிதேவி கல்லூரியை வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தவிர, கல்லூரி விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களும் அடுத்த 2 நாட்களுக்குள் கல்லூரியை காலி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here