ஆருத்ரா மோசடி வழக்கு.., இது தான் நடந்துச்சு.., விசாரணையில் வாக்குமூலம் அளித்த ஆர்.கே.சுரேஷ்!!!!

0
சாரணையில் வாக்குமூலம் அளித்த ஆர்.கே.சுரேஷ்
ஆருத்ரா மோசடி வழக்கில் சிக்கிய தயாரிப்பாளரும் நடிகருமான ரூசோ இந்த வழக்கில் ஆர்.கே சுரேஷுக்கும் பங்கு உள்ளது. நான் அவருக்கு 15 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக தெரிவித்திருந்தார். இதையடுத்து நடிகர் ஆர் கே சுரேஷை விசாரிக்க அவருக்கு பலமுறை சமன் அனுப்பப்பட்ட போதிலும் அவர் ஆஜராகி எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இருந்தார். இந்நிலையில் நேற்று துபாயில் இருந்து வந்த அவர் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜரானார். அப்போது போலீசார் ஆர்கே சுரேஷிடம் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஆர்கே சுரேஷ் வாக்குமூலம் கொடுத்ததாக குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதாவது ஆர்கே சுரேஷ் போலீசாரிடம் கூறியதாவது நான் இத்தனை நாட்களாக தலைமறைவாக இல்லை. நான் தயாரிப்பாளர் ரூசோவிடம் 15 கோடி ரூபாய் பணம் வாங்கியது உண்மைதான். ஆனால் அது வைட் ரோஸ் படத்துக்காக தான் வங்கி கணக்கு மூலமாகவும், ரொக்கமாகவும் பெற்றேன். இந்த பணத்தை வைத்து நான் படத்திற்கு மட்டுமல்லாமல் என்னுடைய சொந்த செலவிற்காகவும் பயன்படுத்தினேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலம் காரணமாக தற்போது போலீசார் ஆர்கே சுரேஷிடம், தயாரிப்பாளர் ரூசோவுடன் போட்ட பட ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை கொண்டு வருமாறு உத்தரவிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

பிக்பாஸ் வீட்டில் இருந்து எஸ்கேப்பாக பார்த்த முக்கிய போட்டியாளர்? இந்த வாரம் எலிமினேட் இவர் தானா? வீடியோ இதோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here