தமிழக பள்ளி மாணவர்களே…, தொடர் விடுமுறைக்கு ரெடியா?? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு டிசம்பர் 7 ஆம் தேதியும், 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதலும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற இருந்தன. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக இன்று (டிசம்பர் 13) முதல் 1 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இதன் படி, இன்று (டிசம்பர் 13) தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. இந்த தேர்வுகள் வரும் டிசம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை என பத்து நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here