எஸ் பேங்க் நிதி நெருக்கடியில் தள்ளாடி வருவதால் தற்போது அதனை ரிசர்வ் பேங்க் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து பல புதிய கட்டுப்பாடுகளை வங்கி விதித்ததால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கடன் சுமையில் இருந்து மீட்க..!
எஸ் வங்கியை கடன் சுமையில் இருந்து மீட்க ரிசர்வ் பேங்க் பல புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக அந்த வங்கியின் புதிய தலைமை நிர்வாகியாக எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,
யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் 50 ஆயிரத்துக்குமேல் பணம் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது.
விளைவுகள்:
இந்த புதிய நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஏடிஎம் முன் குவிந்தனர். மேலும் எஸ் வங்கியின் பங்குகள் கடுமையாக சரிந்தன. இன்று ஒரே நாளில் யெஸ் வங்கியின் பங்குகள் சுமார் 10 சதவீதம் வரை சரிந்து, ரூ.33.20 என்ற அளவில் உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |