Saturday, May 18, 2024

இரண்டாம் கட்டமாக 3 ரஃபேல் விமானங்கள் – ஹரியானாவில் தரையிறங்கும் என்று எதிர்பார்ப்பு!!

Must Read

இந்தியாவில் புதியதாக 3 ரஃபேல் விமானங்கள் தரையிறங்குவதாக தகவல் ஒன்று வெளி வந்துள்ளது. இது இரண்டாம் கட்டமாக இன்று இந்தியா வர உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் படை பலத்தை உலக நாடுகளுக்கு இந்த ரபேல் விமானங்கள் எடுத்துரைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ரபேல் விமானங்கள்:

நம் நாட்டின் விமான படை பலத்தை உலகிற்கு உணர்த்த இந்திய அரசால் ரஃபேல் விமானங்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்த வாங்கப்பட்டது. 36 ரஃபேல் விமானங்கள் வாங்க இந்தியா அரசு பிரான்ஸ் அரசுடன் ஒப்புதல் அளித்து இருந்தது. இந்த ரபேல் விமானங்கள் எதிர்க்கட்சி தரப்பில் இருந்து பலவிதமான விமர்சனங்கள் மற்றும் கண்டனங்கள் எழுந்து வந்தன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், அதை எல்லாம் எதிர்த்து முதல் கட்டமாக ஜூலை 28 ஆம் தேதி 5 புதியதாக ரஃபேல் விமானங்கள் இந்தியாவை வந்தடைந்தது. இதனை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 10 ஆம் தேதி அன்று துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இன்று மாலை 3 ரஃபேல் விமானங்கள் ஹரியானாவில் உள்ள அம்பலா என்ற விமான நிலையத்தில் தரையிறங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியப்படைக்காக முன்பு வாங்கப்பட்ட ரஃபேல் விமானங்கள் லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த 3 ரஃபேல் விமானங்களும் சூழ்நிலையைப் பொறுத்து சில நாட்களில் இயக்கப்படுவதாக ” இந்தியா டுடேவில்” அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனுடன் இன்னும் 8 ரஃபேல் விமானங்களும் இந்திய விமானப்படையில் சேரவுள்ளது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளனர். இவை அனைத்தும் இந்திய விமானப்படையை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -