சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்திய 6 இளம் இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் கார் ஒன்றை பரிசளிக்கப்போவதாக அறிவித்துள்ளது. தமிழக வீரர் நடராஜன் உட்பட பரிசு பெறுபவர்களின் பெயர்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கார் பரிசு:
பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி முதல்தர ஆட்டக்காரர்கள் அனைவரும் சரியாக விளையாட முடியாத நிலையிலும் தங்களது மொத்த உழைப்பையும் கொட்டி இந்தியாவின் வெற்றியினை சாத்தியப்படுத்தினர். சர்தூல் தாகூருடன் சேர்ந்து வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் கலக்கினார். குறிப்பாக இருவரும் அடுத்தடுத்து அரை சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினர். மேலும் சர்தூல் பந்துவீச்சிலும் 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு – துணைமுதல்வர் பேச்சு!!
தமிழக வீரர் நடராஜனும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தனக்கு குழந்தை பிறந்தபோது கூட இந்தியா திரும்பவில்லை. சிராஜ் தனது தந்தை இறப்புக்கு கூட போகாமல் போட்டிகளில் கவனம் செலுத்தினார். இப்படியாக இந்தியாவின் இளம்படை தனது விடாமுயற்சியாலும், உழைப்பாலும் வெற்றி கோப்பையை இந்தியாவின் வசமாக்கியது. குறிப்பாக நடராஜன், வாசிங்டன் சுந்தர் , சிராஜ், சுப்மன் கில், நவ்தீப் ஷைனி, ஷ்ர்த்தூல் ஆகியோரை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் இந்த இளம் வீரர்கள் 6 பேரையும் ஊக்கப்படுத்தும் விதமாக மஹிந்திரா நிறுவனம் கார் ஒன்றினை பரிசளிக்க போவதாக அறிவித்துள்ளது. ஆனந்த் மஹிந்திரா இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ” இந்த் இளம் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மஹிந்திரா தார் என்ற காரை அவர்களுக்கு வழங்கப்போகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் நட்ராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்,