சசிகலாவை தொடர்ந்து அவருடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களது தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சசிகலாவை தொடர்ந்து அவரும் விடுதலை செய்யப்படுவார் என்று எண்ணிய நிலையில் இவ்வாறாக நிகழ்ந்துள்ளது.
சசிகலாவிற்கு கொரோனா:
சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராத தொகையும் பெற்றார். அவருடன் தினகரன் உடன்பட மூவர் கைது செய்யப்பட்டனர். சசிகலா மற்றும் இந்த மூவரின் சிறைத்தண்டனை இன்னும் சிறிது நாட்களில் மூடியுள்ள நிலையில், சசிகலா சில உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சன் டிவியில் “மாஸ்டர்” திரைப்படம் எப்போது திரையிடப்படும்?? வெளியான தகவல்!!
அவருக்கு தீவிர நிமோனியா இருந்ததால் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனை அடுத்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்று மருத்துவர்கள் சந்தேகித்தனர். இதனை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் முதலில், கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது, பின்பு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் அவர் தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தானே தனிமைபடுத்திக்கொண்டார். இவருடன் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை எடுத்து பார்த்ததில் இவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.