RCB அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேறி உள்ளது.
ஐபிஎல்:
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின், 54 வது லீக் போட்டியில், RCB அணியை எதிர்த்து, மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக, விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் RCB அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவர்களில், விராட் கோலி ஒரு ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தார். இவரை தொடர்ந்து அனுஜ் ராவத் 6 ரன்களில் பெவிலியன் திரும்ப, ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்களும், ஃபாஃப் டு பிளெசிஸ் (65) மற்றும் கிளென் மேக்ஸ்வெல் (68) அரைசதம் அடித்து வெளியேற, தினேஷ் கார்த்திக் 30, கேதர் ஜாதவ் 12*, வனிந்து ஹசரங்க 12* என ரன்கள் எடுக்க, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை குவித்திருந்தது.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், மும்பை அணி களமிறங்கியது. இஷான் கிஷன் (42), சூர்யகுமார் (83), நேஹால் வதேரா (52*) என அதிரடியாக விளையாடி, 16.3 ஓவரிலேயே இலக்கை அடைந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றி மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியானது, 12 புள்ளிகள் பெற்று, புள்ளி பட்டியலில் 3 வது இடத்தை பிடித்து, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துக் உள்ளது.