ரேஷன் கடைகளில் மீண்டும் ரூ.1000 நிவாரணம்..? அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்..!

0

தமிழகத்தில் ஏற்கனவே 3 மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மாதத்திற்கும் இது தொடருமா என்கிற கேள்விக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்து உள்ளார்.

ரேஷன் பொருட்கள்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 3 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தொழில் துறைகள் முடங்கி உள்ளதால் உரிய வருமானம் இன்றி மக்கள் அவதிக்கு உள்ளாகினர். எனவே ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் அரசு சார்பில் 1000 ரூபாய் நிவாரண தொகையாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை..!

அடுத்த மாதமும் ரேஷன் கடைகளில் நிவாரணம் வழங்கப்படுமா என்பதற்கு தமிழகத்தின் நிதி நிலைமையை பொறுத்து அது முடிவு செய்யப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்தார். மேலும் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையில் ஒரு போதும் கோட்டை விட மாட்டோம் எனவும் அவர் கூறினார். பொதுமக்களின் நிலையை அறிந்து தான் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது எனவும் மீண்டும் ஊரடங்கு போடப்படுமா என்கிற கேள்விக்கு எப்படி போட முடியும் எனவும் செல்லூர் ராஜு அவர்கள் பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here