ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மார்ச் 15 முதல் தொடக்கம் – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

நடிகர் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டுமாக மார்ச் 15ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’

சிறுத்தை பட இயக்குனர் சிவா தற்போது ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் நடிகை நயன்தாரா, மீனா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. இடையில் கொரோனா நோய் பரவலின் காரணமாக ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா தளர்வுக்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டுமாக துவங்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது படப்பிடிப்பில் பணியாற்றிய சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு மீண்டுமாக நிறுத்தப்பட்டது. இதன் பின்பாக அரசியலில் களமிறங்க நினைத்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு தீவிர ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பின்பு நடிகர் ரஜினிகாந்த் மருத்துவர்களின் அறிவுரைப்படி, உடல் நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தார்.

#INDvsENG இந்திய 11 அணியில் வாஷிங்டன் சுந்தர் – இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்!!

நடிகர் ரஜினிகாந்திடம் பிப்ரவரி முதல் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை மீண்டும் துவங்கலாமா என படக்குழுவினர் கேட்டபோது, மார்ச் மாதம் கடைசியில் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என ரஜினி கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் மார்ச் 15ம் தேதி முதல் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டுமாக துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டி, கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here