ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் ஆட்டத்தில் சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் ஓர் ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது இளம் வீரர் ரஜத் படிதார் இந்திய அணியில் அறிமுகமானார். இவருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் தொப்பி அணிந்து, கைகுலுக்கி வரவேறுத்தார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகும் 310வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ரஜத் படிதார். இதை பார்க்கும் போது விரைவில் இவரைப் போன்று நிறைய இளம் வீரர்களுக்கு இந்திய நிர்வாகம் வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஐபிஎல் தொடரில் RCB அணிக்காக விளையாடி விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.