‘என் மகனுக்கு யாரு முன்னாடியும் நடிக்க தெரியாது’ – பார்வதியிடம் சரவணனை விட்டுக்கொடுக்காமல் பேசும் சிவகாமி!!

0

இன்று “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியா குப்பை தொட்டி வாங்கியதற்காக பெரிதாக சண்டை போடுகிறார். பின், ரவிக்கு நடந்து வரும் போது காயம் ஏற்பட்டு விடுகிறது. சிவகாமி சந்தியா மற்றும் சரவணனுக்கு இடையே இருக்கும் புரிதலை பார்த்து வியந்து போகிறார்.

“ராஜா ராணி 2” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சிவகாமி சந்தியா குப்பை தொட்டி வாங்கியதை தவறு என்று மீண்டும் மீண்டும் எடுத்து கூறுகிறார். சந்தியாவை அவர் பேசவே விடவில்லை. அப்போது சரவணனின் அப்பா ரவி கீழே விழுந்து விட்டு வருகிறார். யாரோ வாழைப்பழ தோலை குப்பை தொட்டியில் போடாமல் அப்படியே போட்டதால் தான் அவர் வழுக்கி விழுந்து விட்டதாக கூறுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸை முன்னேற்ற களமிறங்கும் ஜீவா, கதிர் – அப்போ ஜனார்த்தனன் நிலைமை??

ரவி அப்போது சந்தியாவிற்கு ஆதரவாக பேசுகிறார். இது சிவகாமியை இன்னும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அவர் கோபமாக அந்த இடத்தினை விட்டு சென்று விடுகிறார். பின், சரவணன் மற்றும் சந்தியா இருவரும் தனிமையில் பேசுகின்றனர். அப்போது சந்தியா மிகவும் வருத்தத்துடன் பேசுகிறார்.

தான் எது செய்தாலும் அத்தைக்கு பிடிக்கவில்லை, அதற்காக காரணம் தனக்கு தெரியவில்லை என்றும் கூறுகிறார். இதனை அடுத்து சரவணன் அவரை சமாதானம் செய்கிறார். பின், சிவகாமியை ரவி தனிமையில் சந்தியாவை திட்டியதற்காக இவரும் திட்டுகிறார். அதற்கு சிவகாமி பழைய விஷயங்களை நியாபகப்படுத்துகிறார். இதனால் ரவி அமைதியாகி விடுகிறார். அதற்கு பின்பாக, சந்தியா சரவணனுக்கு உணவு எடுத்து செல்கிறார்.

அப்போது இருவரும் அமைதியாக இருப்பதை பார்க்கும் சக்கரை இருவரையும் பேச வைக்க சந்தியாவிற்கு ஜிலேபி செய்ய கத்து தர சொல்கிறார். இதனை அடுத்து சரவணனும் அவருக்கு சொல்லி கொடுக்கிறார். இதனை வீட்டில் இருந்து பார்க்கும் சிவகாமிக்கு முதலில் கோபம் வருகின்றது. பார்வதியும் வந்து பார்க்கிறார். இருவரும் ஒன்றாக இருப்பதை பார்க்கும் போது அவருக்கு கோபம் வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கண்டபடி பேசி விடுகிறார். இதனை பொறுக்க முடியாத சிவகாமி அவர்கள் இருவரும் கணவன் மற்றும் மனைவி அப்படி தான் இருப்பார்கள் என்று கூறி விட்டு கொடுக்காமல் பேசி விடுகிறார். என் மகனுக்கு யாரு முன்னாடியும் நடிக்க தெரியாது  என பார்வதியிடம் சரவணனை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார் சிவகாமி. இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here