விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று வீட்டில் உள்ள அனைவரும் போஸ்டரை ஒட்ட வீட்டிலேயே பசை தயாரிக்கின்றனர். பின், வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் போஸ்டரை ஒட்ட செல்கின்றனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
இன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று புதிதாக துவங்க இருக்கும் டோர் டெலிவரிக்காக போஸ்டர் ஒட்ட ஆள் தேடுகின்றனர். அவர்கள் அனைவரும் அதிகமாக பணம் கேட்டதால் வீட்டில் உள்ளவர்களே போஸ்டரை ஒட்டலாம் என்று முடிவு எடுக்கின்றனர். ஆனால், அதற்கு பசை தேவைப்படும் என்று அனைவரும் சொல்ல அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கின்றனர்.
கடைசி நேரத்தில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடந்த ட்விஸ்ட் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
தனம் தனக்கு பசை தயாரிக்க தெரியும் என்றும் நாமே வீட்டில் தயாரித்து விடலாம் என்றும் கூறுகிறார். பின், அனைவரும் சேர்ந்து பசை தயாரிக்கும் வேலையில் இறங்குகின்றனர். பின், ஜீவா, கதிர் இருவரும் தாங்கள் போஸ்டர் ஒட்ட போவதாக சொல்கிறார். மூர்த்தியும் தான் கூட வருவதாக கூறுகிறார். வேண்டாம் என்று மறுத்து விடும் ஜீவா தாங்கள் செல்லுவதாக கூறுகிறார். பின், ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் மூவரும் போஸ்டர் ஒட்ட சென்று விடுகின்றனர். குன்னக்குடியின் முக்கிய இடங்களில் போஸ்டரை ஒட்டி விடுகின்றனர்.
பின், மூவரும் வீட்டிற்கு வரும் போது முல்லை தான் முழித்திருக்கிறார். இது குறித்து ஜீவா கேட்ட போது இதனை நேரமும் மூர்த்தி முழித்து இருந்ததாகவும் தற்போது அவர் வந்ததாகவும் தெரிவிக்கிறார். பின், முல்லை கதிரிடம் அனைத்து இடங்களிலும் போஸ்டர் ஒட்டியது குறித்து கேட்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் கதிர் முல்லையை நேரடியாகவே அழைத்து செல்கிறார். அனைத்து இடங்களையும் காட்டுகிறார். முல்லைக்கு போஸ்டரை பார்த்த பின்பு தான் மிகவும் திருப்தியாக இருக்கின்றது. இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.