CSK அணியின் கேப்டனும், முன்னாள் இந்திய அணி வீரருமான தோனி குறித்து சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா கூறிய நெகிழ்ச்சி கருத்துக்கள் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
தோனி குறித்து கருத்து
இந்திய கிரிக்கெட் விளையாட்டில் தலை சிறந்த வீரர்களில் ஒருவர் எம்.எஸ். தோனி. பல்வேறு கஷ்டங்களை கடந்து ஒரு தனி மனிதனாக கிரிக்கெட்டில் இவர் பதித்த சாதனைகள் அளப்பரியது. குறிப்பாக, தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற நிகழ்வு இன்றளவும் ரசிகர்களின் மனதில் பசுமையாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆடுகளத்தில் சாதுவாக காணப்படும் தோனியையும், ஆட்டத்தில் ஆக்ரோஷமாக காணப்படும் தோனியையும் ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதனால் தான் இவருக்கு எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், தோனியின் தீவிரமான ரசிகர்களில் ஒருவரும், முன்னாள் CSK அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா தோனி குறித்த நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ‘தோனி பிறவியில் ஒரு தலைவன். முழுமையான மனிதரும் கூட. அவர் அற்புதமானவர்.
அவரது தலைமையின் கீழ் நான் ரசித்து விளையாடினேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜாவும், ‘எனது கிரிக்கெட் வாழ்க்கை மஹேந்திர சிங் சௌகான் மற்றும் மகேந்திர சிங் தோனிக்கு இடையில் ஆனது’ என்று கூறியுள்ளார். இவர்களது நெகிழ்ச்சி பதிவுகள் தோனியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.