இந்த ஆண்டு நடைபெறும் IPL போட்டியில் RCB அணி வெல்ல வேண்டும் என்று விரும்புவதாக முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
IPL போட்டிகள்
இந்தியாவில் நடத்தப்படும் உள்நாட்டு விளையாட்டு போட்டிகளில் பிரபலமானது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் தான். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும் IPL போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 16 ஆவது IPL போட்டிகள் மார்ச் மாத இறுதியில் துவங்க உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், முன்னாள் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரீசாந்த் IPL 2023 போட்டிகள் குறித்த கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது, இந்த ஆண்டு IPL 2023 தொடரை சென்னை அணி வெல்லும் என்று நினைக்கவில்லை.
‘அதனால் தான் அவர் தல’….,சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி….,
RCB இந்த ஆண்டு IPL போட்டியை வெல்ல வேண்டும் என்று விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசிக்கு முதல் இடத்தை பிடித்து 2 ஆவது ஆளாக போட்டியில் இருந்து வெளியேறியது. அதே நேரத்தில், RCB அணி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது.