வங்கக் கடலில் தென் கிழக்கு கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் தற்போது வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கனமழை காரணமாக இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை., அதிரடியாக வெளியான அறிவிப்பு!!!
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க வானிலை மையம் எச்சரித்துள்ளது.