கடந்த இரு தினங்களாக தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கோடை வெயிலில் வாடி வந்த மக்களுக்கு இந்த மழைப்பொழிவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த சூழலில் இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் இன்று (ஜூன் 20) ஒருநாள் மட்டும் இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழக மக்களே உஷார்.., நாளை இந்த பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம்.., வெளியான அறிவிப்பு !!!
மற்றபடி நேற்று (ஜூன் 19) விடுமுறை அளிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.