தமிழகத்தில் 2015ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 13ஆம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பின்னர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி பெற்றார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதாக தெரிவித்தனர். இதன் காரணமாக பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.
தமிழகத்தில் கனமழை காரணமாக இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை., அதிரடியாக வெளியான அறிவிப்பு!!!
இந்நிலையில் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கான முழு உடல் தகுதியையும் நேற்று (ஜூன் 19) இரவு பெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாளை (ஜூன் 21) அதிகாலை அறுவை சிகிச்சை நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.