மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் தெலுங்கானா மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி 2.73 சதவீதம் உயர்த்தியுள்ளதாக நிதித்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் தெரிவித்துள்ளார். அதாவது 2022 ஜனவரி முதல் அகவிலைப்படி 20.02 சதவீதத்தில் இருந்து 22.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக மக்களே உஷார்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 10 மாவட்டங்களில் மழை.., வானிலை மையம் பகீர் !!!
இந்த அகவிலைப்படி உயர்வு ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும். இதன்மூலம் சுமார் 7.28 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகை மட்டுமே ரூ.1,380 கோடி வரை அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளனர்.