தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள், கன்னியாகுமரி, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை – டீன் தகவல்
ஆந்திரா, கேரளா, கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு, மத்திய கிழக்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். மேலும் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை 3 முதல் 3.4 மீட்டர் வரை எழும்பும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் வரும் 12ம் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.