இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் முக்கிய தொழில்கள் முடங்கிக் கிடப்பதால் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனைப் பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளை கைப்பற்றுவதை அரசு அனுமதிக்கக்கூடாது என ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
பொருளாதார மந்த நிலை:
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் பொருளாதார மந்த நிலை காரணமாக, பல இந்திய நிறுவனங்கள், கையகபடுத்துப்படுவதற்கான, கவர்ச்சிகரமான இலக்குகளாக மாறியுள்ளது. தேசிய அளவிலான பிரச்சனை நிலவும் இந்த நேரத்தில், எந்தவொரு இந்திய நிறுவனத்தையும், வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் HDFC வங்கியின் பங்கு மதிப்பு சரிந்ததால் அதனை சீன நிறுவனம் ஒன்று வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |