நாடெங்கிலும் கொரோனா கோர தாண்டவம் ஆதி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்க படாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவு பிறப்பித்த நிலையிலும் இந்த கொரோனா பரவி கொண்டு தான் உள்ளது. இதற்கான பல முன்னெச்சரிக்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
ரயில்வே பாதுகாப்பு படை
ஊரடங்கு உத்தரவால் நாடெங்கிலும் போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் தற்போது கடந்த 14 ஆம் தேதியில் இருந்து 20 ஆம் தேதி வரை வடமாநில ரயில்களில் பயணித்தவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
விஜயவாடா – சென்னை சென்ட்ரல் (12078), ஜம்மு – நெல்லை (16318), டேராடூன் – மதுரை (12688), டெல்லி – சென்னை சென்ட்ரல் (12622) உள்ளிட்ட 13 ரயில்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |