புதிதாக யூடுப் சேனல் ஆரம்பித்த நாம் இருவர் நமக்கு இருவர் நாயகி…!சொல்றதுக்கு நிறைய இருக்காம்!!!

0

விஜய் டிவியில் தற்போது மிக பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இதன் நாயகியான ரச்சித்தா மகாலட்சுமி புதிதாக ஒரு யூடுப் சேனல் தொடங்கி உள்ளதாக ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான தகவலாக உள்ளது.

பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. அந்த தொடரில் மிக அழகாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அதை தொடர்ந்து சன் டிவியில் இளவரசி சீரியல் நடித்து உள்ளார். இருப்பினும் சரவணன் மீனாட்சி சீரியல்  மூலம் இவரின் புகழ் எங்கும் பரவ தொடங்கியது. மேலும் அந்த சீரியல் ஒரு காதல் மற்றும் குடும்ப கதையை மையமாக கொண்டது. அதில் அவரின் நடிப்பு மற்றும் அழகும் இளசுகளை சீரியல் பார்க்க தூண்டியது.

அதன் பிறகு நாச்சியார் புறம் சீரியலில் ரச்சித்தா மற்றும் அவரின் கணவரும் இணைந்து நடித்திருப்பர். தற்போது மிக விறுவிறுப்பாகவும், பல்வேறு திருப்பங்கள் உடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்  நாம் இருவர் நமக்கு இருவர். இதில் மாயன் மனைவி  மகா கதாபாத்திரத்தில் நடிப்பில் பட்டைய கிளப்பி வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக ஒரு யூடுப்  சேனல்  தொடங்கி உள்ளதாக  தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். மேலும் அந்த வீடியோவில் இது தான் இனி  தன்னுடைய அதிகாரபூர்வ சேனல் எனவும்  தன்னை பற்றி அறிந்து கொள்ள இதனை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுமாறு தெரிவித்து உள்ளார். மேலும் ‘சொல்லறதுக்கு நிறைய உள்ளது’ என்ற கேப்சன் உடன்  இந்த  வீடியோவை  பதிவிட்டு உள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தகவலாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here