இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் தமிழ் திரைக்கு வந்தவர் நடிகை ராசி கன்னா. அவ்வப்போது தனது புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர், ஒரு சின்ன டம்ளருடன் பூக்களோடு பூவாக மிகுந்த அழகில் நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். மேலும் அதில் ரசிகர்களை நோக்கி ஒரு கேள்வியை கேட்டு உள்ளார்.
ஹிந்தி படத்தில் ஒரு துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராசி கன்னா. அதன் பிறகு தெலுங்கில் ‘ஓகளு குசகுசல்தே’ என்ற படத்தியின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு மக்களுக்கு தன்னுடைய முகத்தை காட்டி வந்தார் ராசி கன்னா. அதர்வாவின் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு தெரிய வந்தார். அதை தொடர்ந்து அடங்க மறு, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழியில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவரின் அழகுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் அவரின் ரசிகர்களை அவ்வப்போது தனது புகைப்படங்கள் வாயிலாக குஷிப்படுத்தி வருகிறார். தற்போது அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் அழகான பிங்க் கலர் பூக்களின் நடுவே தற்போது பூத்த பூ போல மிரள வைக்கும் அழகில் கையில் ஒரு டம்ளருடன் உள்ளார். மேலும் அதோடு சேர்த்து உங்களுக்கு காபி பிடிக்குமா? அல்லது டீயா என்பது போன்ற கேள்வியை கேட்டு உள்ளார். அதற்கு அவரின் ரசிகர்கள் சிலர் தங்களின் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்