உலகநாயகனின் நெருங்கிய நண்பரும் குணசித்திர நடிகருமான ஆர் எஸ் சிவாஜி உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.அவரின் இறப்புக்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இவரின் உயிரை ஒரு தடவை கமல் தான் காப்பாற்றியதாக ஒரு நியூஸ் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது மருதநாயகம் படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அவரே போய் அட்மிட்டாகி கொண்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
விஷயம் தெரிந்து கமல் ஓடி வர, அவருடைய மருத்துவ செலவு எல்லாத்தையும் அவரே ஏற்று கொண்டு கட்டினார். அதன் பின்னர் கொரோனா காலத்தில் மருந்து வாங்க கூட பணம் கஷ்டத்தில் இருந்த போது தயக்கத்துடன் கமலுக்கு கால் பண்ணி கேட்டுள்ளார். அப்போது சிறுதளவு கூட முகம் சுளிக்காமல் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறி மருந்து மாத்திரை வாங்கி கொடுத்தாராம். அதனால தான் கடவுளுக்கு பிறகு கமல் தான் எல்லாமே என்று ஒரு பேட்டியில் ஆர் எஸ் சிவாஜி கூறியுள்ளார்.