திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறு கிராமத்தை சேர்ந்த செந்தில் குமார் வீட்டின் முன்பு வெங்கடேசன் என்பவரும் அவரது நண்பர்களும் மது அருந்த சென்றிருந்தனர். அப்போது செந்தில் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகியோர், அவர்களை மது அருந்த கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் செந்தில் குமார் உட்பட அவரது குடும்பத்தினர் 3 பேரையும் வெட்டி படுகொலை செய்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததோடு உயிரிழந்த 4 பேருக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஏனைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.., தமிழக அரசு அரசாணை வெளியீடு!!!!