விஜய் டிவியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த ஷோ தொடங்கிய சமயம் மக்களுக்கு இந்த நிகழ்ச்சி குறித்து எந்த புரிதலும் இல்லாமல் இருந்தது. ஆனால் அடுத்த கொஞ்ச நாட்களில் இந்த ஷோவின் விளையாட்டு முறையை புரிந்து கொண்டு வரவேற்பு கொடுக்க தொடங்கினர். இதுவரை ஆறு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசனுக்கான வேலைகளில் பிக்பாஸ் குழு தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
குறிப்பாக இந்த தடவை இரண்டு வீடு என்று கமல் ப்ரமோவில் அழுத்தி கூறியுள்ளார். அதோடு வேறென்ன விஷயங்கள் புதிதாக வரப்போகிறது என்பதை நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இந்த ஷோவில் ஒரு பிரபல கவர்ச்சி நடிகை களமிறங்கி இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்த இவர் பட வாய்ப்புகள் இல்லாமல் தத்தளித்து வந்துள்ளார்.
இரண்டு முறை உயிரை காப்பாற்றிய உலகநாயகன்.., எமோஷனலான சிவாஜி.., என்ன நடந்தது?
அதன் பிறகு தனது முழு கவர்ச்சியையும் வெளி காட்டி வந்த இவருக்கு பட வாய்ப்பு கிட்டிய பாடு இல்லை. எனவே தற்போது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு தாம் தொலைத்த கெரியரை மீட்டெடுக்க நினைக்கிறார்.அவர் வேறு யாரும் இல்லை நடிகை கிரண் ரதோட் தான். இவர் தான் என்ட்ரி தமிழ் பிக்பாஸில் என்ட்ரி கொடுக்க போகிறார் என்று கூறி வந்த நிலையில் தற்போது கிரண் தெலுங்கு பிக்பாஸுக்குள் சென்று விட்டார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.