அரசு துறையில் காலியாக உள்ள 90% பணியிடங்கள்…, நிரப்புவது குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
அரசு துறையில் காலியாக உள்ள 90% பணியிடங்கள்..., நிரப்புவது குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!
அரசு துறையில் காலியாக உள்ள 90% பணியிடங்கள்..., நிரப்புவது குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு வகையான போட்டி தேர்வுகளை நடத்தி தகுதியான நபர்களை அரசு பணியில் அமர்த்தி வருகிறது. தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், ஒரு போட்டித் தேர்வுக்கான அறிவிப்பானது குறைந்தப்பட்சம் 6 மாதங்களுக்கு முன்னரே வெளியிடப்படுகிறது. இதன்படி, எழுத்து, திறன் மற்றும் நேரடி என பல வகைகளிலும் தேர்வுகள் நடத்தப்பட்டு இறுதி பணி நியமனம் அளிக்கப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த வகையில், புதுவையில் கடந்த ஆண்டு இறுதியில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள ஓட்டுநர் பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதன்படி, கடந்த மார்ச் 31 ஆம் தேதி இந்த பதவிக்கான உடல் தகுதி, திறன் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், பணி நியமனத்திற்கான எழுத்து தேர்வு குறித்து எந்த அறிவிப்பு இதுவரையில் வெளிவரவில்லை. தேர்வு அறிவிப்பு வெளியாகி 10 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் பணி நியமனம் அளிக்கப்படாததற்கு புதுவை மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அரசு துறையில் காலியாக உள்ள 90% பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

பயணிகள் கவனத்திற்கு.., இந்த நாளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.., போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here