தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போகலாம் என தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இது குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளி பொதுத்தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் சற்று குறைந்து வரும் போதிலும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு எந்தவித முடிவுகளையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்திலும் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கோரிக்கை வைத்ததால் அரசின் முடிவும் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் அடுத்த வருட மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உளள்து. இதனால் பள்ளிகள் வாக்குச்சாவடிகள் ஆக மாற்றப்படும். எனவே பொதுத்தேர்வுகளை நடத்துவதில் பல சிக்கல்கள் உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதுமட்டுமின்றி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்தல் முடிந்த பிறகே பொதுத்தேர்வுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவலால் கடந்த ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை போன்று, இம்முறையும் தேர்வுகள் ரத்தாக வாய்ப்புகள் குறைவு தான் எனவும் கூறப்படுகிறது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பொதுத்தேர்வுகள் குறித்து டிசம்பர் மாத இறுதியில் முடிவெடுக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.