விஜய் டிவி பிரபலமான பிரியங்கா பற்றிய விஷயங்கள் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் ட்ரெண்டிங் நாயகி ஆனார். ஏனெனில் அவர் ஒரு தடவை கூட தனது திருமண பேச்சையோ, தனது கணவரை பற்றியோ எதுவுமே சொல்லவில்லை.
அப்படி அவரது வாழ்க்கையில் என்னதான் நடந்திருக்கும் என்று ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். மேலும் இந்த சந்தேகத்தை மேலும் தூண்டும் விதமாக தான் பிரியங்கா பல விஷயங்களை பதிவிட்டு வருகிறார். அதாவது தனது தம்பி மற்றும் அம்மா தான் எனக்கு உலகமே என்று கூறியிருக்கிறார்.
அவரது தம்பிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் போது கூட அவர் கூறியிருந்ததாவது, மகன், கணவன், அப்பா எங்களுக்கு எல்லாமே நீ தான் என பதிவிட்டுள்ளார். மேலும் சில வருடத்திற்கு முன்பு நடந்த விஜய் அவார்ட் நிகழ்ச்சியில் பிரியங்கா சில வார்த்தைகள் பேசி சர்ச்சையில் சிக்கி இருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது அவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற விருது வழங்கப்பட்டது. அதற்காக பலருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். அதிலும் குறிப்பாக தனது மாமனார் தான் தனக்கு கால் அமுக்கி விடுவார் என்ற வார்த்தையை சொல்லி இருப்பார். இது அப்பொழுது பெரிய சர்ச்சையை தான் கிளப்பியது.