உலக தூக்க தினத்தை முன்னிட்டு பணியாளர்களை அனைவருக்கும் ஒரு நாள் லீவு அளித்துள்ளதாக தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
வேக் ஃபிட் நிறுவனம்
நம்மில் பலருக்கு தூக்கம் என்று சொன்னாலே கொள்ளை பிரியம். ஏனென்றால் இப்போது இருக்கும் கலாட்டத்தில் இருக்கும் பிரச்சனை, வேலை பளு, கவலை போன்ற காரணத்தால் சிலர் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
வேலைக்கு செல்பவர்கள் கூட ஒரு நாலாவது லீவு கிடைத்தால் ரெஸ்ட் எடுக்கலாம் என்ற வருத்தத்துடன் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பணியாளர்களை குஷி படுத்தும் விதமாக பெங்களூருவில் உள்ள வேக் ஃபிட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் ஒன்று வேலையாட்களுக்கு விடுமுறை அளித்து ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இது இலவசம்.., முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!!
இதற்கு காரணம் என்னவென்றால் இன்று உலகம் முழுவதும் சர்வதேச தூக்க தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த நாளை சிறப்பிக்க தான் இந்த நிறுவனம் இப்படி ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்பாராத இந்த அறிவிப்பால் பணியாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.