அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்ப் வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிடுவதாக அவரது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு தற்போது முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
டுவிட்டர் கணக்கு முடக்கம்
அதிபர் ட்ரம்பின் டுவிட்டர் பக்கத்தில் சில வன்முறையை தூண்டும் பதிவுகளை பதிவிட்டுள்ளதாக தற்காலிகமாக அவரது டுவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் இத்தகைய கருத்துக்கள் பதிவிடப்படலாம் என்ற நோக்கில் அவரது டுவிட்டர் கணக்கு முற்றிலுமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போதைய அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பல கருத்துக்களை பதிவிட்டுவருகிறார். வரும் ஜனவரி 20 ம் தேதி அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் அதிகாரபூர்வமாக பதவியேற்கவுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதை தொடர்ந்து ஜோ பைடன் அதிபராக வெற்றிபெற்றதை அறிவிக்க கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் விழா நடைபெற்றது. விழா நடந்து கொண்டிருந்த போது ஆயிரக்கணக்கான டிரம்ப்ன் ஆதரவாளர்கள் போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாடாளுமன்ற விழா நடைபெறும் இடத்துக்கு அத்து மீறி நுழைந்தனர். அப்போது நடைபெற்ற கலவரத்தில் ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
பறவை காய்ச்சல் எதிரொலி – முட்டை மற்றும் கோழியின் விலை சரிவு!!
ஜனவரி 20 ம் தேதி ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்கும் நிலையில், தற்போது அதிபர் ட்ரம்பின் டுவிட்டர் கணக்குகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. வன்முறையை தூண்டும் பதிவுகளை பதிவிட்டதாலும், மேலும் இத்தகைய கருத்துக்களை பதிவிடலாம் என்றும் அவரது தனிப்பட்ட டுவிட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் @POTUS என்ற அமெரிக்க அதிபரின் டுவிட்டர் கணக்கிலிருந்து டிரம்ப் பதிவுகளை பதிவிட்டுள்ளார். ஆனால் அந்த பதிவுகளையும் நீக்கியுள்ளது டுவிட்டர் நிறுவனம்.